வீரோ கே வீர் இந்தியக் கட்சி 2024ல் எம்.பி தேர்தலில் தனித்து போட்டியிடும் என கோவையில் நிர்வாகிகள் அறிவிப்பு

கறைபடிந்த அரசியலை சுத்தம் செய்ய வேண்டுமானால், நமது எதிர்காலத்தையும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்க விரும்பினால், இம்முறை 2024 இல் "வீரோ கே வீர் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் கோவை மாவட்ட எம்.பி வேட்பாளர் ரிச்சர்ட் வின்சன்ட் தெரிவித்தார்.


கோவை: இந்தியாவிலேயே முதன்முறையாக "வீரோ கே வீர்” இந்தியக் கட்சி 2024ல் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் 543 இடங்களிலும் ஓய்வு பெற்ற முப்படை இராணுவ வீரர்கள் எம்.பி வேட்பாளர்களாக போட்டியிட இருக்கிறார்கள். இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று(பிப்.14) காலை கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நடைபெற்றது.



இது குறித்து, வீரோ கே கேர் கட்சியின் கோவை மாவட்ட எம்.பி வேட்பாளர் ரிச்சர்ட் வின்சன்ட் கூறுகையில், தேசமும், அதன் நாட்டு மக்களும் இந்தியாவின் முப்படை இராணுவ வீரர்களைப் பற்றி முற்றிலும் பெருமை பாராட்டுகிறார்கள். ஏனெனில் இராணுவ வீரர்கள் நல்லவர்கள், நேர்மையானவர்கள், உண்மையுள்ளவர்கள், ஒழுக்கமானவர்கள், படித்தவர்கள்.

2024ல் தேர்தலில் போட்டியிடும் 'வீரோ கே வீர்" இந்திய கட்சி இந்தியாவை வலிமையான மற்றும் வளர்ந்த தேசமாக உருவாக்க வேண்டும். இந்தியாவின் முப்படை இராணுவ வீரர்கள் நாட்டிற்கு தங்களின் வாழ்வின் பொற்காலத்தைக் கொடுத்துள்ளார்கள், எனவே முப்படை இராணுவத்தின் ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே நாட்டின் பொன்னான நேரத்தைக் கொண்டு வர முடியும்.

கறைபடிந்த அரசியலை சுத்தம் செய்ய வேண்டுமானால், நமது எதிர்காலத்தையும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்க விரும்பினால், இம்முறை 2024 இல் "வீரோ கே வீர எம். பி. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...