மழையில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்த உடுமலை-மூணாறு சாலையை பராமரிக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

பருவமழை தீவிரமடைந்த போது வனப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் உடுமலை-மூணாறு சாலையின் இரண்டு புறமும் மண்அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்து. அதை சீரமைக்க விடுத்த கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மூணாறுக்கு செல்வதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி வழியாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே பஸ் மற்றும் வாகன போக்குவரத்தும், மலைவாழ் மக்களும் சமவெளி பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

பருவமழை தீவிரமடைந்த போது வனப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் உடுமலை-மூணாறு சாலையின் இரண்டு புறமும் மண்அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்து. அதை சீரமைக்க விடுத்த கோரிக்கையும் நிலுவையில் உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், அதிக அளவுடைய போக்குவரத்தைக் கொண்ட உடுமலை-மூணாறு இரண்டு புறத்தையும் மண்ணை கொட்டி சீரமைப்பதற்கு முன்வராதது வேதனை அளிக்கிறது. இதன் காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று விலகிச் செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் திடீரென வாகனங்களை சாலை விட்டு இறங்கும் போது பழுதடைந்து ஆங்காங்கே நின்று விடுகிறது.

வனவிலங்குகள் நடமாட்டம் உடைய தற்போதைய சூழலில் வாகனங்கள் பழுது அடைந்ததால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அத்துடன் புங்கன்ஓடை அருகே சாலையின் இரண்டு புறங்களிலும் புதர் முளைத்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகிறது.

எனவே உடுமலை-மூணாறு சாலையில் இரண்டு புறங்களிலும் மண்ணை கொட்டி சீரமைப்பதுடன் புங்கள் ஓடை பகுதியில் உள்ள புதர்களை அகற்றி சீரான போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...