பொகலூரில் களப்பணியாளர்களுக்கான பாராட்டு விழாவில் கண் கண்ணாடிகளை வழங்கிய கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி

நமது கிராமம் கண் குறைபாடு இல்லாத கிராமம் திட்டத்தின் களப்பணியாளர்களுக்கான பாராட்டு விழா இன்று (பிப்.14) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பொகலூர் தாழத்துறை ஸ்ரீ சக்தி மினி ஹாலில் நமது கிராமம் கண் குறைபாடு இல்லாத கிராமம் திட்டத்தின் களப்பணியாளர்களுக்கான பாராட்டு விழா இன்று (பிப்.14) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.



உடன் சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர்.ஆர்.வீரமணி, சங்கரா கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.எஸ்வி.பாலசுப்பிரமணியம், டைட்டன் நிறுவன மேலான் இயக்குனர் சி.கே.வெங்கட்ராமன் ஆகியோர் இருந்தனர்.

இதனிடையே, அன்னூர் வட்டம், பசூர் ஊராட்சியில் (பிப்.14) மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், அரசுத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...