பொகலூரில் களப்பணியாளர்களுக்கான பாராட்டு விழாவில் கண் கண்ணாடிகளை வழங்கிய கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி

நமது கிராமம் கண் குறைபாடு இல்லாத கிராமம் திட்டத்தின் களப்பணியாளர்களுக்கான பாராட்டு விழா இன்று (பிப்.14) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பொகலூர் தாழத்துறை ஸ்ரீ சக்தி மினி ஹாலில் நமது கிராமம் கண் குறைபாடு இல்லாத கிராமம் திட்டத்தின் களப்பணியாளர்களுக்கான பாராட்டு விழா இன்று (பிப்.14) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.



உடன் சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர்.ஆர்.வீரமணி, சங்கரா கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.எஸ்வி.பாலசுப்பிரமணியம், டைட்டன் நிறுவன மேலான் இயக்குனர் சி.கே.வெங்கட்ராமன் ஆகியோர் இருந்தனர்.

இதனிடையே, அன்னூர் வட்டம், பசூர் ஊராட்சியில் (பிப்.14) மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், அரசுத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...