பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குடல் குழு நீக்க மாத்திரை பற்றி தாய்மார்களுக்கு விளக்கம்

குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் குடல் புழு அதிகமாக உடலில் இருந்தால் அது ரத்த சோகையை உண்டாக்குகிறது. அதனால் பிரசவத்தின் போது தாய்மார்களுக்கு பல பிரச்சனைகள் உண்டாகிறது என காணொளி மூலம் விளக்கப்பட்டது.


கோவை: தேசிய குடல் குழு நீக்க நாள் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் கொண்டாடப்பட்டது.



குழந்தைகள் நலப் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் செல்வராஜ் மற்றும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் அமுதா, செவிலியர் ராணி, கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.



இதில், சிகிச்சைக்கு வந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு குடல் புழு நீக்க மாத்திரை கொடுக்கப்பட்டது. அதன் நன்மைகள் விளக்கப்பட்டது. குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் குடல் புழு அதிகமாக உடலில் இருந்தால் அது ரத்த சோகை உண்டாக்குகிறது. அதனால் பிரசவத்தின் போது தாய்மார்களுக்கு பல பிரச்சனைகள் உண்டாகிறது.



அதிக ரத்த சோகை உள்ள பெண்கள் கடைசி கட்டத்தில் பிரசவத்துக்கு வரும்போது உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு கூட அபாயம் உள்ளது. ரத்தசோகை இருக்கும் தாய்க்கு பிறக்கும் குழந்தைக்கு ரத்த சோகை உள்ளது. இதை தடுப்பதற்காக வளரும் இளம் பெண்களுக்கு வாரம் ஒருமுறை இரும்பு சத்து மாத்திரைகள் பள்ளிகளில் கொடுக்கப்படுகிறது.

இரண்டு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடல் புழு நீக்க மாத்திரை கொடுக்கலாம். இவை அனைத்தும் காணொளி மூலம் விளக்கப்பட்டது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...