பெரியதடாகம் பகுதியில் உள்ள சுயம்பு நாகாளியம்மன் கோவில் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

நேற்று இரவு ஒரு குட்டியுடன் வந்த தாய் யானை பெரியதடாகம் பகுதியில் உள்ள சுயம்பு நாகாளியம்மன் கோவிலின் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த கோவை வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஆனைகட்டி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப்பகுதிகளான மாங்கரை, சின்னத்தடாகம், பெரியதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட குடியிருப்பு மற்றும் தோட்டங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேய்தப்படுத்திச் செல்வது வழக்கம்.

அதேபோல் நேற்று இரவு ஒரு குட்டியுடன் வந்த தாய் யானை பெரியதடாகம் பகுதியில் உள்ள சுயம்பு நாகாளியம்மன் கோவில் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது.

தகவல் அறிந்து அங்கு வந்த கோவை வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகள் குடியிருப்புகளுக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...