ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

பொது மக்கள் வெளியூர்களுக்கு செல்லும் பொழுது அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்து செல்ல வேண்டும், அறிமுகம் இல்லாத புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மற்றும் கோட்டூர் பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களாக பூட்டிய வீடுகளில் தொடர் திருட்டு சம்பவம் அரங்கேறி வந்தது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வால்பாறை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீமதி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து திருட்டு நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியோடு குற்றவாளியை தேடி வந்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சந்தேதிற்கு இடமான நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ஆனைமலை மற்றும் கோட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (38) என்பதும், இவர் மீது மதுரை மாவட்டத்தில் பல்வேறு குற்றம் மற்றும் திருட்டு செயல்களில் ஈடுபட்ட 15 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் கொள்ளையடிக்கப்பட்ட 56 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆனைமலை காவல் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, மதுரை மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பல குற்றங்களில் ஈடுபட்டு 15 வழக்குகளுக்கு மேல் உள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் இருந்து வெளியேறி பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்ததாகவும், தற்போது அவருக்கு பணம் தேவை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு யாரும் இல்லாத வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது என்றும், பொது மக்கள் வெளியூர்களுக்கு செல்லும் பொழுது அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்து செல்ல வேண்டும், அறிமுகம் இல்லாத புதிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த கோட்டூர் மற்றும் ஆனைமலை காவல் நிலைய போலீசாருக்கு கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டுகளை தெரிவித்து சன்மானம் வழங்கினார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...