ஆளுநருக்கு எதிராக மகாலிங்கபுரம் பகுதியில் திமுக மாணவரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் அவமதிப்பு செய்த ஆளுநரை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று தமிழ் தாய் வாழ்த்து பாடலோடு சட்டமன்றம் தொடங்கும் என்பதால் மாநில அரசின் உரையை படிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



தமிழ்நாடு சட்டமன்ற மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் அவமதிப்பு செய்தை ஆளுநரை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி மற்றும் கல்லூரி மாணவர்கள் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையை அவமதித்து வரும் ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும், தமிழ்நாடு அரசு பணத்தில் ஊதியம் பெரும் ஆளுநர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.



திடீரென மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...