உடுமலை அருகே திருமூர்த்தி நகர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஆட்சியர் ஆய்வு

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட வீடுகளில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்திருந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி நகர் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்டவருக்கு கான்கிரீட் வீடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மேலும் இலங்கை தமிழர் முகாமில் கட்டப்பட்ட வீடுகளில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிலையில் இன்று திடீரென திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் இலங்கைத் தமிழர் மறுவாழ் முகாமில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் கூறியாவது, தற்பொழுது முகாமில் கான்கீரிட் வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வீடுகளில் டைல்ஸ் மற்றும் சமையலறையில் மேசை மற்றும் குடிநீர் இணைப்பு உள்ள அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.

தெரு விளக்கு சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் ஆட்சித் தலைவரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆட்சித் தலைவர் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆட்சித் தலைவர் கூறினார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வின் போது உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், உடுமலை ஒன்றிய வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடுமலை அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...