வால்பாறையில் ஐந்து இடங்களில் அதிமுக கட்சியினர் தெரு முனை பிரச்சாரம்

தமிழகத்தில் சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் உயர்வு, மின் கட்டண மும்மடங்கு உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, பால் மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை எடுத்துக்கூறி அதிமுகவினர் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி முன்னிலையில், நகர செயலாளர் மயில் கணேசன் தலைமையில் வால்பாறை, ரொட்டிக்கடை கருமலை, முடீஸ், சோலையார் அணை, ஆகிய பகுதிகளில் நிர்வாகிகள் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சியினர் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் உயர்வு, மின் கட்டண மும்மடங்கு உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, பால் மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வு, சிறு குறு நடுத்தர புதிதாக பீக்ஹவர், நிலை கட்டணம் உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழப்பு, வாழ்வாதாரம் பாதிப்பு, போன்றவைகளால் மக்கள் அதிக சிரமப்படுகின்றனர் என்று அதிமுக கட்சியினர் மக்களிடம் தெருமுனை பிரசாரத்தில் பேசினார்.



இது காலையிலிருந்து மாலை வரை இந்த ஐந்து இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக பேச்சாளர் புரட்சி தம்பி மற்றும் பி.லட்சுமி காந்த், நகரச் செயலாளர் மயில் கணேசன், தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை வி.அமீது, நகரத் துணைச் செயலாளர் பொன். கணேஷ் சலாவுதீன், ஆடிட்டர் சண்முகவேல், எம்.ஆர்.எஸ்.மோகன் சசி, ஐடிவிங் சண்முகம், அரசப்பன் ரொட்டிக்கடை பாபு, ரொட்டிக்கடை ரமேஷ், மஞ்சு பழனிச்சாமி, சீனி ராஜ், லோகேஸ்வரன், பழனியப்பன், ஜான் பீட்டர், விமலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...