வேடப்பட்டியில் மதுபோதையில் தகராறு செய்த பூசாரி அடித்துக் கொலை - மனைவி மற்றும் மகன் கைது

வீட்டிற்கு வந்த பூசாரி தங்கவேல் மதுபோதையில் மகனை கட்டையால் அடிக்க முற்பட்டுள்ளார். அப்போது அவரிடம் இருந்து கட்டையை பிடுங்கிய மகன் தந்தையின் மண்டையில் பலமாக அடித்துள்ளார். மகனுடன் சேர்ந்து தாய் வஞ்சிக்கொடியும் மம்மட்டியால் தங்கவேலை தாக்கி உள்ளார். இதில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் வேடப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (58). இவர் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் தலைமை பூசாரியாக பணி செய்து வருகிறார். இவர் தினமும் மது அருந்திவிட்டு மனைவி மகனுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு மது அருந்திவிட்டு, வீட்டுக்குச் சென்றவர், மனைவி மற்றும் மகனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவருக்கும் அவரது மகன் வாசுதேவன்(29).

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மகனை கட்டையால் அடிக்க தங்கவேல் முற்பட்டுள்ளார்.

அப்போது அவரிடம் இருந்து கட்டையை பிடுங்கிய மகன் தந்தையின் மண்டையில் பலமாக அடித்துள்ளார். மேலும் மகனுடன் சேர்ந்து தாய் வஞ்சிக்கொடியும்

(49) அருகில் இருந்த மம்மட்டியால் தங்கவேலை தாக்கி உள்ளார்.இதில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்துஅக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மடத்துக்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் தங்கராஜ் உடலை மீட்டு,பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பின் வஞ்சிக்கொடி மற்றும் வாசுதேவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் இருவரும் தங்கவேலைத் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து மேற்படி நபர்கள் இருவர் மீதும் மடத்துக்குளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கணவனை மனைவி மற்றும் மகன் கொலை செய்த சம்பவம் மடத்துக்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...