பொள்ளாச்சியில் திமுக சார்பில் குடுகுடுப்பைக்காரர் வேஷம் அணிந்து உடுக்கை அடித்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

இனி ஒரு முறை மோடி பிரதமராகும் பட்சத்தில் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் நாடாளுமன்ற உறுப்பினராக செல்வார் என்றும் குடுகுடுப்பைக்காரர் வேஷம் அணிந்து உடுக்கை அடித்து நபர் ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது கட்சிகள் புதுவிதமான தேர்தல் பிரச்சாரத்தை கையில் எடுப்பது வழக்கம்.

அதேபோல விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது.



திமுகவைச் சேர்ந்த தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பைக்காரர் வேஷம் அணிந்து கையில் உடுக்கையோடு பொள்ளாச்சி நகர் பகுதி வீதிகளில் பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தார்.



பிரச்சாரத்தின் போது திமுக அரசு மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளதாகவும், கேஸ் விலையை உயர்த்தியது தான் மோடி செய்த ஒரே சாதனை என்றும், இனி ஒரு முறை அவர் பிரதமராகும் பட்சத்தில் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் நாடாளுமன்ற உறுப்பினராக செல்வார் என்றும் பிரச்சாரத்தின் போது அவர் பேசினார். இவருடன் பொள்ளாச்சி நகராட்சியின் 32வது வார்டு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...