கோவை மாவட்டத்தில் போலீஸ் உடல் தகுதி தேர்வு இன்றுடன் நிறைவு

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆண்கள் 208 பேர், பெண்கள் 229 பேர் கலந்து கொண்டனர்.


கோவை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2-ம் நிலை காவலர்கள், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் கடந்த 6-ந் தேதி முதல் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

கோவையில் உடற்தகுதி தேர்வுகள் பெண்களுக்கு நேரு விளையாட்டு மைதானத்திலும், ஆண்களுக்கு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்திலும் நடைபெற்று வருகிறது. இந்த உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு முதல் நாளில் சான்றிதழ், உயரம் சரிபார்ப்பு மற்றும் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கயிறு ஏறுதல், உயரம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆண்கள் 208 பேர், பெண்கள் 229 பேர் கலந்து கொண்டனர். கடந்த 6ம் தேதி தொடங்கி 5 நாட்களாக நடைபெற்று வந்த இந்த உடல் தகுதி தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...