பொள்ளாச்சியில் என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் சார்பாக கொங்கு நாட்டு சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா

விழாவில் ஈரோடு யு.ஆர்.சி கட்டுமான நிறுவன இயக்குனர் தேவராஜனுக்கு, கொங்கு நாட்டு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சுசீந்திரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக ரத்தினம் விருது வழங்கப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியில் என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்கள் சார்பில் அமரர் நாச்சிமுத்து கவுண்டர் 75வது ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நிறுவனர் தினத்தையொட்டி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்கு கொங்கு நாட்டு சாதனையாளர் விருது வழங்கும் விழா மகாலிங்கம் பொறியியல் கல்லூரி நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.

என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஈரோடு யு.ஆர்.சி கட்டுமான நிறுவன இயக்குனர் தேவராஜனுக்கு, கொங்கு நாட்டு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சுசீந்திரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருக்கும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக ரத்தினம் விருது வழங்கப்பட்டது.



என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஹரிஹரசுதன் மற்றும் செயலாளர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



விழாவில் பேசிய யு.என்.சி. கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவராஜன், மாணவர்கள் தங்கள் இலக்கினை நோக்கி விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு இலக்கையும் தனி கவனம் செலுத்தி இலக்கை அடையும்வரை விடாமுயற்சி செய்து வெற்றியடைய வேண்டும் என கூறினார்.



இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ கல்வி நிறுவனங்களின் மாணவ. மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...