உப்பாறு அணை அலுவலகம் வளாகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - போலீசார் குவிப்பு

உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் வழங்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கடந்த 16-நாட்களாக உப்பாறு அணை விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தராஜ் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தண்ணீர் திறக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என தெரிவித்து உப்பாறு பாசன விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் வருகின்ற 6-ம் தேதி செவ்வாய்க்கிழமைக்குள் தண்ணீர் திறக்கவில்லை என்றால் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்து இருந்த நிலையில்.



இன்று 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பாறு அணை அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் வழங்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...