சிறுகலந்தையில் தென்னை டானிக் பற்றிய செயல்முறை விளக்கம் அளித்த அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள்

வேளாண் கல்லூரி மாணவர்கள் வேரில் TNAU தென்னை டானிக் கட்டுவது எப்படி என்பது பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்து விளக்கினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


கோவை: அரசம்பாளையம் அமிர்தா வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவிகள், ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தின் (RAWE) கீழ் பல்வேறு விவசாய செயல்முறை விளக்கங்களை கிராம மக்களுக்கு அளித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிறுகலந்தையில், தென்னை வேரில் TNAU தென்னை டானிக் கட்டுவது பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

விவசாயம் செய்வதற்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் தென்னைக்கு உரம் போட்டு பராமரிப்பது சவாலாக உள்ளது. இதற்கு ஒரு சிறந்த தீர்வுதான் வேரில் TNAU தென்னை டானிக் கட்டுவது. இதை வருடத்திற்கு இருமுறை, ஆறு மாத இடைவெளியில் செய்து வருகையில், குரும்பை உதிர்வதை கட்டுப்படுத்தி அதிக காய்களைப் பெறலாம். இதனால் 20 சதவீதம் வரை மகசூலை அதிகரிக்கலாம். இந்நிகழ்வில் வேளாண் கல்லூரி மாணவர்கள் வேரில் TNAU தென்னை டானிக் கட்டுவது எப்படி என்பது பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்து விளக்கினர்.



வேளாண் கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு வெற்றிபெற அமிர்தா வேளாண்மை கல்லூரியின் முதல்வர் முனைவர் சுதீஷ் மணலில் மற்றும் குழு வழிகாட்டுனர்கள் முனைவர் சிவ சபரி, முனைவர் நவீன் குமார், முனைவர் யசோதா, முனைவர் கார்த்திக் ராஜா ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...