கோவையில் 15 பவுன் வழிப்பறி செய்ததாக காவல்துறையிடம் நாடகமாடிய அமமுக மகளிர் அணி மாவட்ட செயலாளர்

சரவணம்பட்டி காவல்துறையினர் சந்திரகலாவை இன்று (பிப்.5) அழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட நபரிடம் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நகை திருடு போகவில்லை என்றும், தான் பொய்யான தகவலை காவல்துறையிடம் அளித்ததாகவும் சந்திரகலா ஒப்புக்கொண்டார்.


கோவை: கோவை கணபதி நேரு நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சந்திரகலா (52), இவர் அமமுக மகளிர் அணி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சத்தி சாலையில் இருந்து தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, இவர்களது வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் சந்திரகலா கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் தங்க செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு சென்றதாகவும், அப்போது சந்திரகலாவும் அவரது கணவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததாகவும், இதனால் சந்திரகலாவுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை குனியமுத்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த மாதம் கணபதி பகுதியில் சந்திரகலாவிடம் வழிப்பறியில் முயற்சி செய்ததாகவும், ஆனால் 15 சவரன் நகையை நான் வழிப்பறி செய்யவில்லை என்றும் அந்த நபர் காவல்துறையிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல்துறையினர் சந்திரகலாவை இன்று (பிப்.5) அழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட நபரிடம் வைத்து விசாரணை மேற்கொண்ட போது நகை திருடு போகவில்லை என்றும், தான் பொய்யான தகவலை காவல்துறையிடம் அளித்ததாகவும் சந்திரகலா ஒப்புக்கொண்டார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...