கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நாளை(பிப்.6) மின்தடை அறிவிப்பு

பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், நல்லாம்பாளையம், சாய்பாபா காலனி, லெனின் நகர், சங்கனுார் ஆகிய பகுதிகளில் நாளை (பிப்.6) பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (பிப்.6) பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில், நல்லாம்பாளையம் : ஹவுசிங் யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுநர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, பாரதி நகர், டி.வி.எஸ்.நகர், ஜெம் நகர், மணியகாரம்பாளையம் (ஒரு பகுதி).

சாய்பாபா காலனி: இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே.புதூர் 6-வது வீதி, கணபதி லே-அவுட், கே.ஜி.லே-அவுட், அம்மாசைக் கோனார் வீதி, என்.ஆர்.ஜி. வீதி. இடையர்பாளையம்: பி.டி.காலனி, இ.பி.காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ்.நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர். சேரன் நகர்: சேரன் நகர், ஐ.டி.ஐ.நகர், தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ராமகிருஷ்ணா நகர் மற்றும் கவுண்டம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்.

லெனின் நகர்: சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி.வீதி, சி.ஜி.லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி மற்றும் தெய்வநாயகி நகர்.

சங்கனுார்: புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் நகர் மற்றும் கருப்பராயன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில் அய்யர்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று திங்கள் கிழமை (5.2.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வால்பாறை வட்ட பகுதியான அய்யர் பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்கு முடி, தாய் முடி, சேக்கல்முடி, சின்னக்கல்லார் பெரியகல்லார், ஹை ஃபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், குரங்குமுடி, வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி, ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் அன்னாளில் மின் பாதையில் அருகே உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கேட்டு கொள்ளப்படுகிறது என்று மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (பிப்.6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்காரம்பாளையம், பாலமலை மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (பிப்.7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஓடையகுளம், குப்புச்சிபுதூர், ராமசந்திராபுரம், கிழவன்புதூர், பெரியபோது, மாரப்பகவுண்டன்புதூர், சின்னப்பம்பாளையம், செம்மேடு, காந்தி ஆசிரமம், எம்.ஜி.ஆர்.புதூர், அம்மன் நகர், ஓ.பி.எஸ். நகர் மற்றும் தாத்தூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...