உடுமலையில் கட்டி முடிக்கப் பட்ட நடை மேம்பாலத்தை திறக்க மக்கள் வலியுறுத்தல்

பஸ் நிலையத்திற்கு தென் பகுதியில் உடுமலை-பொள்ளாச்சி சாலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மைய தடுப்புகள் வைக்கப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் லிப்ட்டுடன் கூடிய இரும்பு மேம்பாலமும் கட்டப்பட்டது. ஆனால் அந்த பாலம் இன்று வரையிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காட்சி பொருளாக உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பஸ்களும் உடுமலை பஸ் நிலையத்திற்குள் வந்து செல்கின்றது. இதனால் பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றி உள்ள பொள்ளாச்சி- உடுமலை, பழனி-உடுமலை சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வந்தனர். அத்துடன் சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து பஸ் நிலையத்திற்கு தென் பகுதியில் உடுமலை-பொள்ளாச்சி சாலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மைய தடுப்புகள் வைக்கப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் லிப்ட்டுடன் கூடிய இரும்பு மேம்பாலமும் கட்டப்பட்டது.

ஆனால் அந்த பாலம் இன்று வரையிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காட்சி பொருளாக உள்ளது. சாலையின் மையப் பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு அவதிப்பட்டு வருகின்றனர். மேம்பாலமும் அதில் உள்ள லிப்ட்டும் பயன்பாடு இல்லாமல் சேதமடைந்து வருகிறது.

இதனால் அந்த பாலம் கட்டப்பட்ட நோக்கமும், அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகி வருகிறது. பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகின்ற நகராட்சி நிர்வாகம் உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் கட்டப்பட்ட மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது அவசியமாக உள்ளது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...