நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கியதை தொடர்ந்து திருப்பூரில் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புதிய பேருந்து நிறுத்தம் அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நடிகர் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


திருப்பூர்: நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் தனது கட்சியின் பெயரை நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன்படி தமிழக வெற்றி கழகம் என புதிதாக துவங்கப்பட்டுள்ள கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து நீண்ட நாட்களாக நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து இருந்த அவரது ரசிகர்கள் தமிழக முழுவதும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.



அதன்படி திருப்பூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புதிய பேருந்து நிறுத்தம் அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



நிகழ்வில் வடக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் குத்புதின், மாவட்டச் செயலாளர் சின்னதுரை, மாவட்டத் துணைத் தலைவர் அலாவுதீன், மாவட் மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் சேக் சித்திக் சதக்கத்துல்லா, வாசிம் விக்கி, செல்வா, கார்த்திக், அஜித் குமார் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...