காங்கேயம் சென்னிமலை சாலையில் வீணாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் - நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

குடிநீர் வீணாகும் இடத்தை சுற்றி நோய் தொற்றுகளை ஏற்படுத்த கூடிய வகையில் மிகவும் சுகாதாரமற்ற அசுத்தமாக உள்ளது. பிளாஸ்டிக் பைகள், மது மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள், சாக்கு பைகள், குப்பைகள் என முழுவதும் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன் குடிநீரும் மாசடைந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சென்னிமலை சாலையில் மின் மயானம் எதிரில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கின்றது. இந்த குழாயின் ஏர்வால் அதே இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஏர்வால்வில் கடந்த ஆறு மாதங்களாக பல லட்சம் லிட்டர் காவிரி கூட்டு குடிநீர் வீணாக சென்று சாக்கடையில் கலக்கின்றது.

கடந்த 6 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அந்த குழாய்களின் வழியே செல்லும் பெரும்பாலான தெருக்களுக்கும், குடியிருப்புகளுக்கும் முறையாக குடிநீர் செல்லாமல் சாலைகளில், கழிவுநீர் கால்வாய்களிலும் வெள்ளம் போல் குடிநீர் வழிந்து ஓடுகிறது.

நகராட்சி நிர்வாகம் அதை சரி செய்யாமல் சாக்கு பைகளை வைத்து அடைத்து வைத்துள்ளனர். அடைத்து வைத்திருந்தாலும் மேலும் குடிநீர் பீச்சி அடித்து வெள்ளம் போல் சாக்கடையில் கலந்து வீணாக செல்கின்றது. தற்போது குடிநீர் தட்டுப்பாடு காங்கேயம் பகுதியில் அதிகரித்து வரும் நிலையில் இவ்வளவு குடி நீரானது தினசரி சாக்கடையில் கலந்து செல்வது வேதனை அளிக்கிறது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.



மேலும் பல ஆண்டுகளாக காங்கேயம் நகராட்சியில் குடிநீர் பராமரிப்பு பணியில் பணிபுரியும் ஊழியர்கள் பணியிடை மாறுதல் ஆகாததே இதற்கெல்லாம் காரணம் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குடிநீர் வீணாகும் இடத்தை சுற்றி நோய் தொற்றுகளை ஏற்படுத்த கூடிய வகையில் மிகவும் சுகாதாரமற்ற அசுத்தமாக உள்ளது.

பிளாஸ்டிக் பைகள், மது மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள், சாக்கு பைகள், அன்றாட வீட்டு உபயோக குப்பைகள் என முழுவதும் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன் குடிநீரையும் மாசுபடுத்தி வருகிறது. மேலும் இந்த குடிநீர் குழையை மூடிவைத்திருக்கும் சாக்கு பயையை சுற்றியிலும் வனப்பகுதி நீர் தேக்கத்தில் இருக்கும் அட்டை பூச்சிகள் உள்ளது.

மேலும் இந்த பகுதியில் தான் புதிய நகராட்சி கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. மேலும் இது போலவே 20க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீரானது வீணாக சாக்கடைகளிலும், சாலைகளிலும் செல்கின்றது. எனவே இது குறித்து நகராட்சியும் மற்றும் நகராட்சி குடிநீர் வடிகால் துறை ஊழியர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...