மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நகர திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

பொள்ளாச்சி நகர திமுக சார்பில் கோவை சாலையில் உள்ள காந்தி சிலை சிக்னல் அருகே நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மும்மதத்தை சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நகர திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு நாளை திமுகவினர் மத நல்லிணக்க நாளாக கொண்டாட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.



இதனையடுத்து, பொள்ளாச்சி நகர திமுக சார்பில் கோவை சாலையில் உள்ள காந்தி சிலை சிக்னல் அருகே நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இதில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என மும்மதத்தை சேர்ந்தவர்கள் மகாத்மா காந்தி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



பின்னர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...