மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு துணிப்பைகள் பயன்படுத்த அறிவுரை

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார் தலைமையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மத்திய மண்டலம், காந்திபுரம், 100 அடி ரோடு மற்றும் மேற்கு மண்டலம், மேட்டுப்பாளையம் ரோடு, அண்ணா மார்க்கெட் ஆகிய இடங்களில் உள்ள பிளாஸ்டிக் சில்லரை மற்றும் மொத்த விற்பனைக் கடைகளில் 50 மைக்ரான் குறைவாக உள்ள சுமார் 460 கிலோ பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்யப்பட்டது. 



மேலும், கடை உரிமையாளரிடம் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை உபயோகிக்குமாறு இன்று மாநகராட்சி அலுவலர்கள் வலியுறுத்தினர்.

கோவை மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதால் அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருமுறையே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை மக்கள் முறையின்றி கண்ட இடங்களில் எறிவதாலும் அவை மக்கும் தன்மை இல்லாததாலும் அவற்றால் சுற்றுப்புறசூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. 

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த 21ம் தேதியன்று உதவி நகர்நல அலுவலர் தலைமையில் சுகாதார அலுவலர்கள் மற்றம் ஆய்வாளர்களுடன் ராஜ வீதி மற்றும் தாமஸ் வீதியில் உள்ள பிளாஸ்டிக் மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வின் போது 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் சுமார் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள 5 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மாச் 24ம் தேதியன்று உதவி நகர்நல அலுவலர் தலைமையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் மத்திய மண்டலம், காந்திபுரம், 100 அடி ரோடு மற்றும் மேற்கு மண்டலம், மேட்டுப்பாளையம் ரோடு, அண்ணா மார்க்கெட் ஆகிய இடங்களில் உள்ள பிளாஸ்டிக் மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் சுமார் 460 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளரிடம் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பைகளை உபயோகிக்குமாறு மாநகராட்சி அலுவலர்கள் வலியுறுத்தினர்.

மேலும், வரும் மே 1ம் தேதியிலிருந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் முற்றிலுமாக தடைசெய்யப்படவுள்ளது. மேலும், மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

ஆகவே, தடைசெய்யப்பட்ட 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...