பண்ணைகிணறு ஊராட்சியில் மகளிர் உரிமை தொகை வழங்குவதில் பராபட்சம் - வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்காமல், வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டும் உரிய பதிலளிக்காத காரணத்தால் இன்று வட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளதாக பெண்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பண்ணைகிணறு ஊராட்சியில் கோழி குட்டை, முக்கூடு ஜல்லிப்பட்டி, கிராமங்களில் ஏழை எளிய மக்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் தொடர்ந்து பாரபட்சம் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகின்றது.



இந்த நிலையில் பலமுறை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கு மேற்பட்ட முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பெண்கள் கூறியதாவது, மகளிர் உதவி தொகை எங்கள் கிராமத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கிடைக்காமல், வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் கிடைக்கிறது. மேலும் இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டும் உரிய பதிலளிக்காத காரணத்தால் இன்று வட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளோம்.



ஆகையால் ஏழை எளிய மக்களுக்கு அதிகாரிகள் முறையாக களஆய்வு செய்து மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் உடுமலை வட்டாட்சியர் சுந்தரத்திடம் கிராம மக்கள் தரப்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. வட்டாட்சியர் சுந்தரம் சில தினங்களில் நேரில் ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...