குறுஞ்சேரி ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உடுமலை பெதப்பம்பட்டி சாலையில் மக்கள் மறியல்

பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கிராம சபை கூட்டத்தில் குறிஞ்சேரி ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குறிஞ்சேரி கிராமத்தை உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தரப்பில் தீர்மானம் கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்பட்டது.

அதற்கு அதிகாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் உடுமலை-பெதப்பம்பட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட்டால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து ஊராட்சித் துறை அதிகாரிகள், போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அத்துடன் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மேலும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் குறிஞ்சேரி ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் உடுமலை பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. சாலை மறியல் போராட்டத்தால் உடுமலை பெதப்பம்பட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...