கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நாட்டின் 75-ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம்

இளைஞர் நலமே, வலிமையான இந்தியா' என்பதை மெய்ப்பிக்கின்ற வகையில், இளைஞர்கள் உடலாலும், உள்ளத்தாலும், அறிவாலும், ஆளுமையாலும் திறன்பெற்றுத் திகழவேண்டும் என்று கற்பகம் கல்விக்குழுமத்தின் பதிவாளர் முனைவர் ரவி பேசினார்.


கோவை: கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர். இராச. வசந்தகுமார் அவர்கள் விழாவில் தேசியக்கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார்.



பதிவாளர் முனைவர் சு.இரவி அவர்கள், குடியரசுதின விழா பேருரை ஆற்றினார். '



பழமையான குடியரசு நாடாகிய இந்தியாவின் தனித் தன்மையைக் காப்பதில் இளைஞர்களின் பங்கு அளப்பரியது. நாளும் பல புதிய செயற்கைக்கோள்களை ஏவுதல் முதலான பல தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது. அத்தகைய உயர்வை என்றும் நிலைநிறுத்த இளைஞர்களின் சமுதாயப் பொறுப்புணர்வும், பொதுநல உழைப்பும் தேவை.

அனைத்து துறைகளிலும் நாட்டை வலிமையாக்க, இளைஞர் நலன் நாளும் மேம்பட வேண்டும். இளைஞர் நலமே, வலிமையான இந்தியா' என்பதை மெய்ப்பிக்கின்ற வகையில், இளைஞர்கள் உடலாலும், உள்ளத்தாலும், அறிவாலும், ஆளுமையாலும் திறன்பெற்றுத் திகழவேண்டும்' என்றார்.

தேசிய மாணவர்ப்படை வீரர்களும், கேப்டன் சிறீதரன் ‌அவர்களும் விழாவில் பாராட்டுப் பெற்றனர். விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர் க. முருகையா, தேர்வாணையர் முனைவர் ப.பழனிவேலு, முதன்மையர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...