தமிழ்நாட்டில் முதன்முரையாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு மருத்துவ சுற்றுலாவிற்க்கு தரமான மருத்துவமனை சான்று


மருத்துவ பயணம் மற்றும்  நலமுடன் ஒரு சுற்றுலா தமிழகத்திற்கு முதல் முறையாக கோவையில் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு முதல் சான்றிதழ்அ மெரிக்காவில் உள்ள எம்டிக்யுயுஏ MTQUA மருத்துவ சுற்றுலாவுக்கு உகந்த மருத்துவமைனகள், கிளினிக்குகள், ஏஜென்சிகள், சிறப்பு மருத்துவ சிகிச்சை மையங்கள், ரிசார்ட்டுகள் போன்றவைகளை ஆராய்ந்து, சான்றிதழ்களை வழங்கி வருகிறது. 

இதற்கான பயிற்சிப்பட்டறை, தர நிர்ணயம் மற்றும் முறைகளையும் வழங்கி வருகிறது. உலகில் மிக சில இடங்களில் மட்டுமே உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம் சார்ந்த கல்விமுறைகள் கற்பித்தல் உள்ளன. ஆதாரப்புர்வமான தரநிர்ணயங்களின் அடிப்படையில், மருத்துவ சுற்றுலா பயணத்துக்கான வசதிகளை தரும் நிறுனங்களை தேர்வு செய்து சான்று வழங்குகின்றன. தகவல் தொடர்பு, இயக்கம், பண்பாடு, கலாச்சாரம், சந்தைப்படுத்துதல், இணைய பயன்பாடு, தனிமை காப்பு போன்ற வாடிக்கையாளர்கள் சேவைகளை மதிப்பீடு செய்கிறது. மருத்துவம் மற்றும் சேவை அளிப்போர் தர நிர்ணயத்தின் அளவுக்கோ, அதை விட மேலாகவோ செயல்படுவோருக்கு சான்றுகள் அளிக்கப்படுகின்றன. இந்த நிறுவனம், சமீபத்தில் மருத்துவ சுற்றுலா தொடர்பாக உலகத்தரத்திலான பயிற்சி தரவும் சான்றிதழ்  வழங்கவும் புதிய திட்டத்தை உருவாக்கியது.

மருத்துவ பயணம் மற்றும் சுகாதார நலச்சுற்றுலா தர குட்டமைப்பின் நிறுவனர் ஜூலி மன்ரோ பேசுகையில், “மருத்துவ சுற்றுலா பயணிகள், நம்பகமான அளவில் சிகிச்சை தரும் நிறுவனங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்குவோரை நாடுகின்றனர். பிற நாடுகளில் தங்களது பாதுகாப்பு, மற்றும் சிறப்பான சிகிச்சை பற்றியும் உறுதியை அளிக்க வேண்டுகின்றனர்.  சிகிச்சை தரும் டாக்டர்களை பற்றியும், மருத்துவமனையின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் சொந்தமாக விசாரித்து அறிய வேண்டியள்ளது. இத்தகைய விசாரணையை அவர்கள் மேற்கொள்வது மிகவும் கடினமானது. இந்நிலையில் சர்வதேச அளவில் சான்று பெற்ற ஆலோசகரால் செய்ய முடியும். மருத்துவ சுற்றுலா துறையில் சான்று வழங்குவது ஒரு மகத்தான மைல்கள் என்றே சொல்லலாம். மாற்று முறை மருத்துவம் விரும்புவோருக்கும் தேடுவோருக்கும் இது ஒரு சிறப்பான வழிகாட்டுதல்," என்றார்.

MTQuA நிறுவனர் மற்றும் தலைவர் ஜூலி டபிள்யு மன்ரோ,  அமெரிக்கா நிதி நிர்வாக முதுநிலை ஆலோசகர்   ஜெனட் எம் கெட்டஸ் ஆகியோர் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் 3 நாட்களாக இங்குள்ள வசதிகளை ஆராய்ந்து சான்று வழங்கியுள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டிலேயே இத்தகைய சான்றிதழ் பெறும் முதல் மருத்துவமனையாக திகழ்கிறது.  சான்றிதழை எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை வர்த்தக அலுவலர் சுவாதி ரோஹித் பெற்றுக் கொண்டார். மருத்துவமனை செயல் அதிகாரி சி.வி ராம்குமார், டீன் சுகுமாறன், மருத்துவ இயக்குனர் டாக்டர் ஐசக் மோஸஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...