உடுமலை அருகே குழிப்பட்டியில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள சந்தன மரக் கட்டைகளை கடத்த முயன்ற நான்கு பேர் கைது

குழிப்பட்டியைச் சேர்ந்த பச்சையன், எரிசனம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், குணசேகரன், நடராஜ் ஆகியோர் சந்தன மரத்தை வெட்டி கடத்தியதை ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தனமரத்தை வெட்டி கேரளாவுக்கு கடத்த முயன்ற நான்கு பேரையும் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனபகுதியில் அரிய வகை தாவரங்கள் உயிரினங்கள் வனவிலங்குகள், சந்தன மரங்கள் மற்றும் மூலிகை மரங்கள் உள்ளன. இந்த நிலையில் குழிப்பட்டி பகுதியில் உடுமலை வனத்துறையினர் வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் சந்தன மரத்தை வெட்டி கடத்தியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து உடுமலை வனத்துறைக்கு அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழிப்பட்டியைச் சேர்ந்த பச்சையன், எரிசனம்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார், குணசேகரன், நடராஜ், ஆகியோர் சந்தன மரத்தை வெட்டியதாக ஒப்புக்கொண்டனர்.



இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சந்தனமரத்தை வெட்டி கேரளாவுக்கு கடத்த முயன்ற நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள எட்டு கிலோ உயர் ரக சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், உடுமலை ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைத்தனர். உடுமலையில் சந்தன மரங்களை வெட்டி கேரளா கடத்த ஒன்று நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...