40 அடி ஆழ கிணற்றில் விழுந்த காட்டு யானை மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டது, வனத்துறையின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள், வன ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் பாலமலை அருகே உள்ள கோவனூர் என்ற கிராமத்தின் அருகில் செவ்வாய்கிழமை இரவு காட்டு யானை கூட்டம் ஓன்று புகுந்தது. அப்போது அங்கிருந்த பயன்படுத்தப்படாத தோட்டத்து கிணற்றில்  10 வயது மதிக்கதக்க ஆண் யானை தவறி விழுந்தது.

 

இந்நிலையில் யானையின் பிளிறல் சப்தம் கேட்ட அக்கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் புதன்கிழமை யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 40 அடி கிணற்றில் விழுந்த காட்டு யானையை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன, எனினும் இரவு நேரம் ஆனதாலும், மற்ற காட்டு யானை கூட்டம் வந்ததாலும் யானையை மீட்கும் பணியை ஒத்தி வைத்தனர். முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வியாழக்கிழமை காலை 6 மணி முதல் யானையை மீட்கும் பணி துவங்கியது.



வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் ஆகியோர் இணைந்து யானையை கிணற்றில் இருந்து மீட்கும் பணியை துவங்கினர், மேலும் வனத்துறை மருத்துவர்கள் அசோகன், வியஜராகவன் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் முதலில் யானைக்கு  மயக்க மருந்து செலுத்தினர். பின்னர் கிணற்றின் உள்ளே சென்ற வனத்துறையினர் கிரேன் உதவியுடன் யானையை கட்டி பாதுகாப்பாக மேலே கொண்டு வந்தனர். பின்னர் யானையின் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்துகளும் ஊசிகளும் போடப்பட்டது.யானையின் கால்களில் அடியேதும் படாததால் மீண்டும் வனப்பகுதிக்குள் யானையை அனுப்ப முடிவு செய்த வனத்துறையினர் கட்டப்பட்ட கயிறுகளை அவிழ்த்த உடன் யானை வனப்பகுதிக்குள் ஓடிச்சென்றது. 

இது குறித்து மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியன் கூறுகையில் மீட்பு பணி சிறப்பாக நடைபெற்றதாகவும், யானையின் கால்களில் அடி படாததால் மீண்டும் வனப்பகுதிக்குள்ளேயே அனுப்பியதாக கூறிய அவர் தனி குழு அமைக்கப்பட்டு அந்த யானை அதன் கூட்டத்துடன் சேர்க்கப்படும் என தெரிவித்தார். 40 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானையை 30 மணி நேரத்தில் உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பிய வனத்துறையினருக்கு பொதுமக்கள் விலங்கு நல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...