காங்கேயம் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

நெய்க்காரன் பாளையம், ஆலம்பாடி, சகாயபுரம், கலைஞர் நகர், நத்த காட்டு வலசு, வரப்பாளையம், சந்தியா நகர், காடையூர், சிவன்மலை, படியூர், நத்தக்காடையூர் ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்டம், காங்கேயம் ஒன்றிய அதிமுக கழகம் சார்பில் முன்னாள் முதல்வர், பாரத ரத்னா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய கழகச் செயலாளருமான என்.எஸ்.என் நடராஜ் தலைமையில் 10 மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக கொடிக்கம்பங்களில் கொடியேற்றி, எம்ஜிஆர் அவர்களின் திரு உருவப்படங்களுக்கு மலர் தூவி மாலை அணிவித்தும், பொங்கல் வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டும் கொண்டாடி வருகின்றனர்.

இதில் காங்கேயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்க்காரன் பாளையம், ஆலம்பாடி, சகாயபுரம், கலைஞர் நகர், நத்த காட்டு வலசு, வரப்பாளையம், சந்தியா நகர், காடையூர், சிவன்மலை, படியூர், நத்தக்காடையூர் ஆகிய பகுதிகள் ஆகும். முதலில் நெய்க்காரன்பாளையத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் மாவட்ட கழக துணை செயலாளர் லட்சுமி சோமசுந்தரம், ஒன்றிய கழக துணை செயலாளர் திருச்செந்தில், காமாட்சிபுரம் மணி, லோகேஸ்வரன் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

மேலும் எம்ஜிஆரின் சிறப்புக்கள் குறித்தும் அவர் நடித்த படங்களின் பாடல்கள் வரிக்குறித்தும் சிறப்பாக எடுத்துக்கூறப்பட்டது. புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா அவர்கள் வழியில் 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தவர் நமது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எனவும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் சிறப்பாக செயற்படுகின்றார் எனவும், மீண்டும் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் எப்போது ஆட்சி அமையும், அதில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் அரியணையில் ஏறுவார் என பொதுமக்கள் காத்திருக்கின்றனர் என காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் தெரிவித்தார்.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...