கேசிடி கல்லூரி நிறுவனரின் 94-வது பிறந்தநாள் விழாவில் மகாலிங்கம் செஸ் அகாடமியை துவக்கிவைத்த கிரான்ட் மாஸ்டர் விஷ்வநாதன் ஆனந்த்

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் அருட்செல்வர் என்.மகாலிங்கம் 94-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு மார்ச் 20 மற்றும் 21 ஆகிய இருநாட்கள் அக்கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின்போது என்.மகாலிங்களம் அவர்களின் அவரது பார்வையிலான அதிகாரம், சமூக உணர்வுள்ள மனித நேய உணர்வு உள்ளிட்டவை குறித்து பகிரப்பட்டது.



மார்ச் 20 முதல் நாள் நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி ஊக்கத்தொகை மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. மார்ச் 21, செவ்வாயன்று குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் நாளை முன்னிட்டு இணைத் தலைவர் ஸ்ரீ ஷங்கர் வானவராயர் வரவேற்புறை ஆற்றினார்.



பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்புரை ஆற்றினார். ஸ்ரீ மானுவல் ஆரோன் அவர்களை உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் வி.சுந்தர் பொன்னாடை போற்றி வரவேற்றார். துணை தலைவர் எம்.மாணிக்கம், நிருபர் ஸ்ரீ. எம்.பாலசுப்ரமணியம் மற்றும் அக்கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.குமார் ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கினார்கள்.



நா.மஹாலிங்கம் சாதனையாளர் விருது இவ்வருடம் மானுவேல் ஆரோனுக்கு செஸ் விளையாட்டை இந்தியாவில் வளர்ச்சி பெற அரும்பாடு பட்டமைக்கு வழங்கப்பட்டது. ஆரோன் நா.மஹாலிங்கம் அவர்களுடன் இருந்த நட்பை பற்றியும், பின் அவர் செஸ் மீது கொண்ட ஈடுபாடும், அக்கறையும் பற்றி அவரது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நா.மஹாலிங்கம் செஸ் அகாடமி பள்ளி மாணவர்கள், செஸ் வீரர்கள் மற்றும் செஸ் ஆர்வலர்களுக்கு, செஸ் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் என ஊக்குவிக்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. 

செஸ் ஆர்வலரான அருட்செல்வரின் நினைவாக இந்த அகாடமி துவங்கப்பட்டுள்ளது. நா.மஹாலிங்கம் செஸ் அகாடமியை முன்னால் உலக சாம்பியனான ஜி.எம்.விஸ்வநாதன் ஆனந்த் திறந்து வைத்தார்



இதனைத்தொடர்ந்து, விஸ்வநாதன் ஆனந்த பேசுகையில், அருட்ச்செல்வரால் தான் தமிழ்நாடு செஸ் அகாடமி உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். மேலும் கொங்கு மண்டலத்தில் இந்த அகாடமி தலை சிறந்த அகாடெமியாக உருவெடுக்கும் மற்றும் இந்த அகாடெமியிலிருந்து பல சாம்பியன்கள் உதயமாவார்கள் என்று புகழுரைத்தார்.

மேலும், இந்நிகழ்சியில் ஜோதி நிலையம் மற்றும் விருத்தினர் மாளிகை திறப்பு விழா, தேவாரப் பண்ணிசைப் போட்டி, லய சமர்ப்பணம் போன்ற கலை நிகழ்சிகளும் நடைபெற்றன.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...