போலீசார் அழைத்துச் சென்ற வாலிபரின் நிலை என்ன? : கமிஷனர் அலுவலத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்


கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த ஜாபர் அலி என்பவரது மகன் அபுதாகிர். இவர் உக்கடம் பகுதியில் செருப்பு கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு சென்ற சி.பி.சி.ஐ.டி போலீசார் அபுதாகிரை துப்பாக்கி முனையில் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து அபுதாகிர் வீட்டிற்கு போலீசார் தகவல் எதுவும் தராததால் பதற்றமடைந்த அவரது பெற்றோர் உக்கடம் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அபுதாகிர் இல்லை என்று போலீசார் பதிலளித்ததால் பதற்றமடைந்த அவர்கள் மேற்கொண்டு சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கும் அபுதாகிர் இல்லாததால் மேலும் பதற்றமடைந்த அபுதாகிரின் பெற்றோர் மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்ற வாலிபரின் நிலை என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பினர்.



தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போலீசார், அபுதாகிர் குறித்த தகவல் இன்று மாலைக்குள் தெரிவிக்கப்படும் என்றனர். ஆனாலும் கூட்டத்தினர் கலைந்து செல்ல மறுத்தனர்.



தொடர்ந்து, அபுதாகிரின் பெற்றோர்கள் மட்டும் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம், அபுதாகிரிடம் விசாரணை முடிந்த பின்னர் அவரை பார்க்களாம் என்றும், மற்றவர்களை கலைந்து செல்லுமாறு சொல்லும்படியும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...