பொள்ளாச்சி நகர்மன்ற கூட்டத்தில் சாதிப்பெயரை பயன்படுத்திய உறுப்பினருக்கு எதிர்ப்பு

கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 5 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேவகி தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் ஜாதி பெயரை பயன்படுத்தி பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கூறி திமுக நகரமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.



அப்போது கூட்டத்திற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழி எடுப்பதற்கு ஆயுத்தமான போது திடீரென கூட்டத்திலிருந்து பட்டியலினத்தை சேர்ந்த திமுக நகரமன்ற உறுப்பினர்கள் கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 5 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேவகி தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் ஜாதி பெயரை பயன்படுத்தி பேசினார்.



அவர் மீது இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீண்டாமை உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நகர மன்ற கூட்டத்திலேயே நகரமன்ற உறுப்பினர் தேவகி தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் ஜாதி பெயரை பயன்படுத்தி பேசி உள்ளார். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

நீதிமன்றத்தில் நான்கு வாரத்திற்கு கைது செய்யக் கூடாது என இடைக்கால தடையாணை பெற்று கூட்டத்திற்கு வந்துள்ளார். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களாகிய எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. காவல்துறை உயர் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நகர மன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...