அமராவதி முதலைப் பண்ணை அருகே வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கடை திறப்பு

முதற்கட்டமாக குடிநீர், ஐஸ்கிரீம், தேநீர், மீன் வருவல், ஆனைமலை புலிகள் காப்பக சின்னத்தில் கீ செயின், டீ சர்ட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. வருங்காலங்களில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அவர்களது கருத்துக்கேற்ப உணவு வகைகள் மற்றும் கைவினைப் பொருள்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே அமராவதி அணையின் முதலைப் பண்ணை பகுதியில் சுற்றுச்சூழல் கடை திறக்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் கோட்டம், அமராவதி வனச்சரகம் சார்பில் அமராவதி அணை பகுதி அருகே கடந்த 1975 ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முதலைப்பண்ணை துவக்கப்பட்டது.



இங்கு குட்டிகள் முதல் பெரியது வரை 84 சதுப்பு நில முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அமராவதி வனச்சரகத்தில் கரட்டுப்பதி, பாறையூர், தளிஞ்சி வயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக தமிழக அரசு வனத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அமராவதி முதலை பண்ணை அருகே கரட்டுப்பதியில் 75 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக சுற்றுச்சூழல் மேம்பாட்டுகுழு அமைக்கப்பட்டு, வனத்துறையுடன் இணைந்து சுற்றுச்சூழல் கடை திறக்கப்பட்டது.

இங்கு முதற்கட்டமாக குடிநீர், ஐஸ்கிரீம், தேநீர், மீன் வருவல், ஆனைமலை புலிகள் காப்பக சின்னத்தில் கீ செயின், டீ சர்ட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. வருங்காலங்களில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அவர்களது கருத்துக்கேற்ப உணவு வகைகள் மற்றும் கைவினைப் பொருள்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



சூழல் கடை திறப்பில் ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் ராமசுப்பிரமணியம், இணை இயக்குனர் தேவேந்திர குமார் ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்தனர். இதில் அமராவதி வனச்சரகர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் ராமசுப்பிரமணியம் முதலைப் பண்ணையில் பராமரித்து வரும் முதலைகள் மற்றும் அவற்றிற்கு வழங்கப்படும் உணவு குறித்தும், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் குறித்தும் வனத்துறையினரிடம் ஆலோசனை செய்தார்.

மேலும் புதிதாக துவங்கப்பட்டுள்ள சூழல் கடையில் உணவுகளை தரமாகவும், சுகாதாரமாகவும் சுற்றுலா பயணிகள், மாணவர்களின் கருத்துக்களை கேட்டு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்க அறிவுறுத்தினார். தேர்வு விடுமுறை என்பதால் முதலை பண்ணைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...