உடுமலை அருகே நடந்த நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விழிப்புணர்வு சிகிச்சை முகாம்

நாட்டின நாய்கள் பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரம் மற்றும் காணொளி படம் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்பட்டது. 70க்கும் மேற்ப்பட்ட நாட்டின நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசிகள் போடப்பட்டது.


திருப்பூர் ;திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நாட்டின நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.



தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் "நாட்டின நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்" பெதப்பம்பட்டி கால்நடை சிகிச்சை வளாகத்தில் நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் பா.குமாரவேல் இவ்விழாவை தலைமையேற்று நடத்தி நாட்டின நாய்கள் பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரம் மற்றும் காணொளி படம் அடங்கிய குறுந்தகட்டினை வெளியிட்டார். அவர் தம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு நாட்டின நாய்களை பாதுகாப்பதன் முக்கியதுவத்தை எடுத்துரைத்தார்.



திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் மண்டல நாட்டின நாய்கள் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் த.ரவிமுருகன் சிறப்புரை யாற்றினார். அவர் தம் உரையில் நாட்டின நாய்கள் நம் கலாச்சாரத்தோடு இணைந்துள்ளது என்பதை விவரித்தார். அம்மாபட்டி மற்றும் சாளையூர் கிராமத்தில் உள்ள நாட்டின நாய் வளர்ப்பு ஆர்வலர்கள் முறையே குமார் மற்றும் சாந்தகுமார் வாழ்துரை வழங்கி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை மருத்துவ சிகிச்சையியல் துறையின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். உதவிப் பேராசிரியர் மருத்துவர் இன்பராஜ் நன்றியுரையாற்றினார். இவ்விழாவில் உடுமலைப்பேட்டை மற்றும்அதன் சுற்று வட்டாரங்களில் இருந்து 70க்கும் மேற்ப்பட்ட நாட்டின நாய்களுக்கு இலவசவெறிநோய் தடுப்பூசிகள் போடப்பட்டது. இவ்விழாவில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...