மடத்துக்குளம் அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை - ஒருவருக்கு அரிவாள் வெட்டு

மணி தான் வைத்திருந்த அருவாளை எடுத்து நாகராஜின் பின் கழுத்தில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தப்பியோடிய மணி என்பவரை கைது செய்து சிறையில் போலிசார் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கணியூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கணியூர் நல்லா போயன் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகன் மகன் நாகராஜ்(39) இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கட்டிடம் கட்டும் வேலை செய்து வருகிறார். இவருடன் கட்டிட வேலை செய்துவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் மிடாப்படியே சேர்ந்த கருப்பு சாமியின் மகன் மணி (43) என்பவர் நாகராஜனுக்கு சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுத்துள்ளார்.

இந்தப் பணம் திரும்ப கேட்கும் பொழுது இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மாலை மணி என்பவர் நாகராஜ் வீட்டிற்கு வந்து பணத்தை திருப்பி கேட்ட பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மணி தான் வைத்திருந்த அருவாளை எடுத்து நாகராஜின் பின் கழுத்தில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்பு அருகில் இருந்தவர்கள் வெட்டுப்பட்ட நாகராஜை மீட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.



இது சம்பந்தமாக கணியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட மணி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...