வால்பாறை அருகே தடுப்புச் சுவரில் மோதி டிராக்டர் விபத்து - எஸ்டேட் தொழிலாளி படுகாயம்

டிராக்டர் விபத்தில் மகேஷ்வரன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர். பாலத்தில் இருந்து தண்ணீரில் விழுந்து தலையில் அடிபட்ட நிலையில், 11 பேர்கள் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் உள்ளனர்.


கோவை: வால்பாறை அருகில் நடுமலை ஆற்று பாலத்தி சென்ற எஸ்டேட் டிராக்ட்டர் தடுப்பு சுவரில் மோதியதில் எஸ்டேட் தொழிலாளிகள் காயம் அடைந்துள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் நேற்று வீட்டு வாசலில் 12 வயது சிறுவன் சேலையால் ஊஞ்சல் கட்டி ஆடும்போது கழுத்தில் சேலை மாட்டி இறந்தது உடலை வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து தங்களது குலவழக்கப்படி நல்லடக்கம் செய்ய வேண்டி உறவினர்களிடம் சிறுவனின் பிரேதம் ஒப்படைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.

மேற்படி பிரேதத்துடன் பின் தொடர்ந்து எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான டிராக்டரை ஆகஸ்டின் என்பவர் 12 நபர்களுடன் ஓட்டி சென்று உள்ளார்.



நடுமலை எஸ்டேட் ஆற்று பாலம் வளைவில் திருப்பிய போது தடுப்புச் சுவரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மோதியதில் மகேஷ்வரன் வயது 43 என்பவர் பாலத்தினுள் தண்ணீரில் விழுந்தது. இதில் தலையில் அடிபட்ட நிலையிலும் 11 பேர்கள் லேசான காயங்களுடனும் வால்பாறை காவல் துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.



இதில் மகேஷ்வரன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு பொள்ளாச்சி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...