குண்டடம் அருகே கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் - திரளான கால்நடைகள் பங்கேற்பு

பசு, எருமை மாடு, ஆடு, கோழி, நாய் ஆகிய கால்நடைகளுக்கு கூடற்புழு நீக்கம், கோமாரி நோய் தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி உள்ளிட்ட 1,195 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.


திருப்பூர்: குண்டடம் அடுத்த கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

குண்டடம் அடுத்த கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் சூரியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கோப்பனகவுண்டன் பாளையத்தில் நடைபெற்றது. குண்டடம் வட்டாரம் பேட்டை காளிபாளையம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

முகாமில் பீலிக்காம்பட்டி கால்நடை உதவி மருத்துவர் மோகன்ராஜ் தலைமையில் மருத்துவர் கொண்ட குழுவினர் பசு, எருமை மாடு, ஆடு, கோழி, நாய் ஆகிய கால்நடைகளுக்கு கூடற்புழு நீக்கம், கோமாரி நோய் தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி உள்ளிட்ட 1,195 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

மேலும் மழை மற்றும் பனிக்காலத்தில் கால்நடைகளை எவ்வாறு பாதுகாப்பது குறித்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் முதலிபாளையம் கால்நடை உதவி மருத்துவர் அருண்நிதி, பொன்னாங்காளிவலசு கால்நடை ஆய்வாளர் காந்திமதி, குண்டடம் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுமதி, விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சிறந்த கால்நடை மேலாண்மைக்கான மூன்று சிறப்பான வளர்ப்பு கிடாரி கன்றுகளின் உரிமையாளரான விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...