தாராபுரம் அருகே காற்றாலை நிறுவன லாரி மோதி மின்கம்பங்கள் சேதம் - சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள்

உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் சாலையின் நடுவில் கிடந்ததால் பெரும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதே போல் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.


திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள பகுதிகளில் இயங்கி வரும் தனியார் விண்டு மில் மின் உற்பத்தி நிலையங்களில் நடைபெற்று வரும் பணிகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள கரையூர் மற்றும் ஆலம்பாளையம் பகுதிகளில் தனியார் விண்டு மில் மின் உற்பத்தி நிலையங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக மீண்டும் மில்லின் உதிரி பாகங்கள் ஆன இறக்கைகள் மற்றும் கோபுர தூண்கள் ட்ரான்ஸ்பார்மர்கள் ஆகியவற்றை லாரிகள் மூலம் கர்நாடகா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு சாலை வழியில் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தாராபுரம் அருகே உள்ள கரையூர் பகுதியில் காத்தாடியின் உதிரி பாகங்களை கனரக வாகனங்களில் தனியார் விண்டு மில் நிறுவனத்தினர் கொண்டு வந்தனர்.

அப்போது தாறுமாறாக கனரக வாகனங்கள் விண்டுமில் உதிரிபாகங்களை ஏற்றுக் கொண்டு வந்த போது கரையூர் காளியம்மன் கோவில் பகுதியில் உள்ள மின் கம்பங்களை உடைத்தும் பெயர்களை சேதப்படுத்தியது.

அதேபோல் கரையூர் கிராமம் முழுவதும் உள்ள 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் உயர் அழுத்த மின்கம்பங்கள் சாலையின் நடுவில் கிடந்ததால் பெரும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருந்தது அதுமட்டுமின்றி கரையூர் மற்றும் ஆறாம் பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு 20க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...