டேங்கர் லாரியும் காரும் மோதி விபத்து 5 பேர் பலி - தாராபுரம் அருகே நிகழ்ந்த சோகம்

திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு பழனியில் இருந்து தாராபுரம் வந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த மனக்கடவு அருகேடேங்கர் லாரியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம்*_பழனி சாலை மனக்கடவு அருகே கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெட்ரோல் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரியும் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்திலிருது திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பும் பொழுது தாராபுரத்தை அடுத்த மனக்கடவு அருகே டேங்கர் லாரியும் காரும் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதில் 4-பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அலங்கியம் போலீசார் முதல் கட்ட விசாரணையில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி (51) இவரது மனைவி சித்ரா (49) தாராபுரம் உடுமலை சாலையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (78) இவரது மனைவி செல்வராணி (70) மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கலாராணி என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கலாராணி என்பவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்த போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் முதல் கட்ட விசாரணையில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக பழனி சென்று விட்டு தாராபுரம் திரும்பும் பொழுது மனக்கடவு அருகே டேங்கர் லாரியும் காரும் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

சாலை விபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய பொழுது காரும் - டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 5-பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அலங்கியம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...