கோவையில் விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் - கலெக்டர் அதிரடி உத்தரவு

நீலாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அவிநாசி ரோட்டில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இத்தகவல், கலெக்டர் கிராந்திகுமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக, அவ்விளம்பர பலகைகளை அகற்ற சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.


கோவை: கோவை - அவிநாசி ரோட்டில், நீலாம்பூரில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இருந்த விளம்பர பலகைகள், நேற்று அகற்றப்பட்டன. வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில், சாலை சந்திப்புகள், பிரதான சாலைகளுக்கு அருகில் விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது.

கோவையில் அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாத சமயங்களில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன், கோவை நகர் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினரால் அகற்றப்பட்டன.

நீலாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அவிநாசி ரோட்டில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இத்தகவல், கலெக்டர் கிராந்திகுமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக, அவ்விளம்பர பலகைகளை அகற்ற, சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, நீலாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சட்ட விரோதமாக, அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அனைத்து விளம்பரபலகைகளும், நேற்று அகற்றப்பட்டன. இரும்பு சட்டங்கள் பறிமுதல் செய்யப்படும். சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜ் கூறுகையில், ''அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள், ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வருகின்றன. அனைத்து விளம்பர பலகைகளும் அகற்றப்படும். இரும்பு சட்டங்களையும் வெட்டி எடுக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினருக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். அவர்களே அகற்றாவிட்டால், ஊராட்சி சார்பில் அகற்றி, அதற்குரிய செலவு தொகை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வசூலிக்கப்படும். அறுத்தெடுக்கப்படும் இரும்பு சட்டங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...