தாராபுரம் ஐயப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை ஆனால் தாராபுரம் சோழக்கடை வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறது.


திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் தராரபுரம் ஐயப்பன் திருக்கோயில் மகா கும்பாபிசேகத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சோளக்கடை வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் சுவாமி ஆலய ஜீர்னோத்தாரன அஷ்பந்தன மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.

தாராபுரம் சோழக்கடை வீதியில், ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதுப்பிக்கும் பணி, மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.



தாராபுரம் அமராவதி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து வந்தனர். தொடர்ந்து, முதல்கால யாக பூஜை நடந்தது. 14-ம் தேதி காலை, இரண்டாம் காலயாக பூஜையும், அன்று மாலை, மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. 15-ல் நான்காம் கால யாக பூஜையும், மாலை, ஐந்தாம் கால யாக பூஜையும், கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.



காலை, ஆறாம் கால யாக பூஜையும், 8:30 மணிக்கு கடம் புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு விமான கோபுரத்துக்கு கும்பாபிஷேகமும், 9:30 மணிக்கு ஐயப்பன், மூலஸ்தானத்தில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் தாராபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோபுர தரிசனம் மற்றும் சுவாமி தரிசனம் செய்தனர்.

குறிப்பாக ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை ஆனால் தாராபுரம் சோழக்கடை வீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுகிறது. என்பது தாராபுரம் ஐயப்பன் கோயிலின் சிறப்பு என பக்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு ஸ்ரீ ஐயப்பன் கோவில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் ஜெமினி பெருவழி பயணக்குழு, தலைவருமான சி.சண்முகவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...