உடுமலை வருவாய் கோட்டாட்சியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

மடத்தூர் பிரிவில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் வீட்டின் பூட்டை உடைத்து டிவி, ஸ்டெபிலைசர், வாஷிங் மெஷின், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து ஜஸ்வந்த் கண்ணன் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாச்சியராக ஜஸ்வந்த் கண்ணன் பணியாற்றி வருகிறார். இவருக்கு அரசு தரப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பு பள்ளபாளையம் அருகே மடத்தூர் பிரிவில் அமைந்து உள்ளது. அதில் தங்கி இருந்து ஜஸ்வந்த் கண்ணன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி குடியிருப்பை பூட்டிவிட்டு சொந்த ஊரான பரமத்திவேலூருக்கு சென்று விட்டார்.

பின்னர் பணிக்கு திரும்பிய அவர் அலுவலக பணிகளை முடித்துக் கொண்டு இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது.



உள்ளே சென்று பார்த்த போது டிவி, ஸ்டெபிலைசர், வாஷிங் மெஷின், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட 1லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்து ஜஸ்வந்த் கண்ணன் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆர்.டி.ஓ குடியிருப்பில் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். உடுமலை வருவாய் கோட்டாட்சியர் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...