தேசிய குழந்தைகள் தினம் - கோவையில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் தொந்தரவிற்கு கிடைக்க பெறும் தண்டனைகள் குறித்தான பதாகைகளை ஏந்தி பேரணி கோவையில் நடைபெற்றது. இறுதியாக உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


கோவை: தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி கோவையில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியார் தொடங்கி வைத்தார்.

ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் இந்தியா முழுவதும் தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் குழந்தைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறை, மாநில குழந்தைகள் பாதுக்காப்பு சங்கம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திக்குமார் துவக்கி வைத்தார்.



இந்தப் பேரணியில், சமூக பாதுகாப்பு துறையினர் மற்றும் தேசிய குழந்தைகள் சங்கத்தினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் தொந்தரவிற்கு கிடைக்க பெறும் தண்டனைகள் குறித்தான பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.



இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி ரேஸ்கோர்ஸ்யில் நிறைவடைகிறது. பேரணிக்கு முன்னதாக குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.



மேலும் இந்நிகழ்வில் நிமிர்வு கலைக்குழுவினரின் பறை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...