கோவையில் மழை நீர் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்

கோவை அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு அடியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையாளரும் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு அவர்கள் ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் கன மழை பெய்ததன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. குறிப்பாக அவிநாசி மேம்பாலத்திற்கு அடியிலும், லங்கா கார்னர் மேம்பாலம் கிக்கானிக் மேம்பாலத்திற்கு அடியிலும் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவையில் மழை பாதிப்புகளுக்கு உள்ளான பல்வேறு பகுதிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.



அதன்படி கோவை அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு அடியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தனர்.



அதனைத் தொடர்ந்து லங்கா கார்னர் பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



அதனைத் தொடர்ந்து மருதமலை பகுதி ஐஓபி காலணியில் மழையின் காரணமாக சேதம் அடைந்த சாலைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு அதனை சரி செய்யும் பணிகளை விரைவுப்படுத்திட அறிவுறுத்தினர்.



அதனைத் தொடர்ந்து செல்வபுரம் பகுதி அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து முழங்கால் அளவிற்கு வெளியேறியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்த தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அவர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.



அப்பொழுது கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மழை பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளை காண்பித்து மழைநீர் வெளியேறுவதற்கான காரணங்களை சுட்டி காட்டினார்.

அப்பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையாளரும் மழை நீரை உடனடியாக வெளியேற்றும் பணிகளை விரைவு படுத்திடவும் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...