கோவையில் தேங்கிய மழைநீர் - உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு

வடக்கு கிழக்கு பருவ மழை தீவிரமான நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. மழைநீர் வடிகால் வடிகால் நிரம்பி குப்பைகளோடு தண்ணீர் வடிந்தோடிய நிலையில் மேயர் ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கிய இடங்களைமேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.13க்குட்பட்ட மாணிக்கவாசகர் நகரில் மாண்புமிகு மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு வீடுகளில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட சங்கனூர் கால்வாய் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரி, அப்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட கல்பனா லே-அவுட் பகுதியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு, இரவு பெய்த மழையில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார்நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...

Jan to Sep: 132 Offenders Placed Under Preventive Detention in Coimbatore

A total of 132 persons involved in various criminal activities were preventively detained under the Tamil Nadu Preventio...