வால்பாறை அருகே பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானை - பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதால் அச்சம்

பச்சை மலை எஸ்டேட் அருகே யானைகள் நடமாட்டம் உள்ள நகராட்சி பள்ளியில் ஏழு மாணவர்களே படிக்கும் நிலையில் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானைகள் பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே சில தினங்களாக 22 காட்டு யானைகள் கருமலை எஸ்டேட் பச்சமலை எஸ்டேட் பாரலை எஸ்டேட் போன்ற எஸ்டேட் பகுதிகளில் சுற்றி வந்தது.



பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நுழைந்த 15 காட்டு யானைகள் பள்ளி வளாகத்தில் நுழைந்து சுவர் மற்றும் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளிருந்த டேபிள் சேர் டிவி ஸ்மார்ட் போர்டு பள்ளி குழந்தைகளின் வருகை ஆவணங்கள் போன்ற அனைத்து பொருட்களை சேதப்படுத்தியது, பள்ளி வளாகம் வன பகுதி அருகில் உள்ளதால் யானையை வந்தது யாருக்கும் தெரியாத நிலையில் யானைகளை விரட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



பள்ளியில் ஏழு மாணவர்களே படிக்கும் நிலையில் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...