உடுமலையில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் - கால்நடை உதவி இயக்குனர் ஆய்வு

உடுமலை கோட்டத்தில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாக்குமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் முகாமினை கால்நடை உதவி இயக்குனர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

உடுமலை சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்தின் உபதொழிலான கால்நடை வளர்ப்பு பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பசு மற்றும் எருமை உள்ளிட்ட கால்நடைகளை கோமாரி நோயில் இருந்து பாதுகாக்கும் வகையில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி மடத்துக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட கழுகரைப் பகுதியில் நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பூசி முகாமை உடுமலை கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் வே.ஜெயராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் கூறுகையில், கோமாரி நோய் தடுப்பு ஊசி 4- ம் சுற்று வருகின்ற 26 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.

உடுமலை கோட்டத்தில் மொத்தம் உள்ள 63 ஆயிரம் பசு மற்றும் எருமை இனங்கள், மாநில எல்லையோர கிராமங்களில் உள்ள 12 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி ஏற்கனவே செலுதப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கேற்ப செயல் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தடுப்பூசி குழுவினர் தங்கள் பகுதிக்கு வரும் பொழுது தங்களது 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கால்நடைகளை நோயிலிருந்து பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...