கோவையில் திமுக பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நிறைவு - ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என மீனா ஜெயக்குமார் பதில்

மீனா ஜெயக்குமாரின் சொத்து ஆவணங்கள் குறித்து கேட்ட கேள்விக்கு அதைப்பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது என்று தெரிவித்துவிட்டார்.


கோவை: கோவையில் திமுக பிரமுகருக்கு சொந்தமான இடங்களில் 6-வது நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.

கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் திமுக பிரமுகர் மீனா ஜெயகுமார் வீடு, அவரது மகன் ஸ்ரீராமின் பீளமேடு அலுவலகம், சௌரிபாளையம் காசாகிரான்ட் அலுவலகம், அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில் குமார் இல்லத்தில், திமுக முன்னாள் கவுன்சார் எஸ்.எம் சாமி வீட்டில் ஆகிய இடங்களில் 6 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வந்த நிலையில் மாலை சுமார் 6.30 அளவில் சோதனை நிறைவடைந்தது.

கடந்த நாட்களாக நடைபெற்ற சோதனையில் எந்த விதமான ஆவணங்களும் வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் செல்லவில்லை.திமுக மீனா ஜெயக்குமார் அமைச்சர் ஏ.வ வேலுக்கு உறவினர் என்று கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக பிரமுகர் மீனா ஜெயகுமார், இந்த சோதனையில் அதிகாரிகள் எந்த பொருளும்,பணமும் ஆவணங்களும் எடுத்து செல்லவில்லை எனது கணவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமைச்சர் ஏ.வ வேலுவிற்கு அறிமுகமானவர் என்றும் அமைச்சர் ஏ.வ வேலு கோவை வந்தபோது பொங்கலூர் பழனிச்சாமி தன்னையும் தனது கணவரையும் அறிமுகப்படுத்தியதாக கூறினார்.

அமைச்சர் ஏவா வேலு எங்களுக்கு நெருங்கியவர் என்ற முறையில் வருமான வரி கலந்த இல்லத்தில் சோதனை நடத்தியதாகவும் தனது ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகளுடன் காண்பித்து சரிபார்த்ததால் எந்த விதமான ஆவணங்களையும் வருமானவரித்துறையினர் எடுத்துச் செல்லவில்லை என்று கூறினார். வருமானவரித்துறை அதிகாரிகள் தனது செல்போனை கைப்பற்றி கொண்டு இன்று மாலை தான் கொடுத்தார்கள்.

சோதனையின் போது பணிவுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் கேள்வி கேட்டார்கள் என்றும் கூறினார். பல்வேறு அமைச்சர்கள் வீட்டில இது போன்ற வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது என்கின்ற கேள்விக்கு வெளிப்படையாக இது அனைவருக்கும் தெரிகிறது. மீனா ஜெயக்குமாரின் சொத்து ஆவணங்கள் குறித்து கேட்ட கேள்விக்கு அதைப்பற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...