உடுமலை அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி மருத்துவமனை தூக்கி வரும் அவலம் - பாதை அமைத்து தரக்கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி வனச்சரகங்களில் மலைவாழ் குடியிருப்பு மக்களுக்கு விரைந்து பாதை அமைத்து கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


திருப்பூர்: உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொறுப்பாரு, ஆட்டுமலை ஈசல்தட்டு, குலிப்பட்டி, குருமலை, மேல்குருமலை, மாவட்டப்பு, தளிஞ்சி, தளிஞ்சிவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு தேவையான ஒரு சில அடிப்படை வசதிகள் வனத்துறை, வருவாய் துறை,தன்னார்வலர்கள் சார்பில் அவ்வப்போது செய்து தரப்படுகிறது. ஆனால் இன்றளவும் பாதை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முழுமையாக பூர்த்தி அடைவதற்கு வழிவகை பிறக்கவில்லை. இதனால் பிரசவம்,அவசரகால உதவி, விபத்து, ஏதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகள் நடைபெற்றால் சிகிச்சைக்கு அடிவாரப் பகுதிக்கு வருவதற்குள் மலைவாழ் மக்கள் மறு ஜென்மம் எடுத்து விடுகின்றனர்.



பாதை வசதி இல்லாததால் உயிரைக் காக்க உயிரை பணயம் வைத்து நோயால் பாதிக்கப்பட்ட நபரை அடர்ந்த வனப்பகுதிக்குள் தொட்டில் கட்டி தூக்கி வந்து அடிவாரத்தை அடைய வேண்டிய சூழல் உள்ளது.

பின்னர் வாகனத்தை பிடித்து ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வேண்டிய உள்ளது. இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், மலைவாழ் குடியிருப்புகளுக்கு பாதை வசதி அமைப்பதற்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை விரைந்து தொடங்குவதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும். அடிப்படை தேவையான பாதை வசதி பூர்த்தி அடைந்தால் யாருடைய உதவியும் இல்லாமல் எந்த ஒரு தேவையும் காலத்தே செய்து கொள்ள இயலும். எனவே மலைவாழ் குடியிருப்புகளுக்கு விரைந்து பாதை அமைத்து கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...