உடுமலை தமிழிசை சங்கத்தின் துணைத் தலைவர் நினைவேந்தல் நிகழ்ச்சி

அமரர் வஞ்சிமுத்து கொண்ட நட்பு, அன்னாரின் தமிழ்ப்பணி, சமுதாயப் பணிகள் குறித்து எடுத்துரைத்து புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.


திருப்புர் :உடுமலை தமிழிசைச் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த அமரர் வஞ்சிமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி உடுமலையில் நடைபெற்றது.



உடுமலை தமிழிசைச் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த அமரகா வஞ்சிமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சி உடுமலை மிழிசைச்சங்கத்தின் சார்பில் பாரதியார் நூற்றாண்டு அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் கெங்குசாமி தலைமை வகித்தார்.



சங்கத்தின் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு. சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.

ஆர். கே. ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் அரிமா ஆர்.கே. ராமசாமி, அமரர் வஞ்சிமுத்து கொண்ட நட்பு, அன்னாரின் தமிழ்ப்பணி, சமுதாயப் பணிகள் குறித்து எடுத்துரைத்து புகழஞ்சலி செலுத்தினார்.



நல்லாசிரியர் கு.சீ. மணி, பேராசிரியர் முனைவர் செல்வநாயகம், வானொலி தங்கவேல், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா ஆகியோர் அன்னாரின் சிறப்புகளை கூறிப் புகழ் அஞ்சலி செலுத்தினர். அமரர் வஞ்சிமுத்து ஆசிரியரிடம் பயின்ற மாணவிகள் பானுப்பிரியா, மோகனப்பிரியா மற்றும் ராம் கோடி ராகவி ஆகியோர் தங்கள் ஆசிரியருக்கு இரங்கல் கவிதை படித்தனர்.

முன்னதாக ஆசிரியர் சின்னராசு வரவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக கல்வியாளர் செ. மூர்த்தி நன்றி கூறினார். சங்க ஒருங்கிணைப்பாளர் அமிர்தநேயன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அமரர் வஞ்சிமுத்துவின் புதல்வர் சரவணன் ஏற்புரை நிகழ்த்தினார். உடுமலை தமிழிசை சங்கத்தின் நிர்வாகிகள் எஸ். எம். டிராவல்ஸ் நாகராஜ் மற்றும் சத்யம் பாபு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அமரர் வஞ்சிமுத்து திருவருவப்படத்திற்கு அனைவரும் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...